இனியொரு முறை எனக்காக பிறந்து வா 💕

என்னை பொருத்தவரை
எந்தன் உயிர் காதலி நீ.!
உன்னைப் பொருத்தவரை
உருப்படாத பேர்வழி நான்.!

வெயிலுக்கு ஒதுங்கும்
மரமாக உனக்காய்...
காதலாய் வளர்ந்து...
கிளை விரித்துப் பரப்பி...
காத்திருக்கிறேன் நான்.

காணும் அனைத்திலும்
உன்னையே ...
காணுகிறது கண்கள்.

மண்ணில் மட்டுமல்ல
மனதிலும் விழுகிறது
உனது நிழல்.!!

தொலைதூர கனவாக
தூரம் இருக்காமல்...
அன்பின் சாரலாய்
என்று நீ மாறிடுவாய்.!!

காலம் முடியும் முன்
காதலியே வந்துவிடு.!!
இதயம் தானே கேட்கிறேன்
எனக்காக தந்துவிடு.!!

காயம்பட்ட என் காதலை
கழுவி நீ மருந்திடு.!!
உனது காதல் கொண்டு
அதற்கு
உடனடியாய் சிகிச்சை அளி.!!
உயிர் பிழைக்க வைத்து
அதை
உன்னுடனே வைத்துக்கொள்.!!

இறுதிச் சடங்கு வரை
எதிர்பார்க்க வைக்காதே.!!!
ஒருவேளை...
இயலாது என்றால்
இனியொரு முறை
எனக்காக பிறந்து வா...

///---///---///
மருத கருப்பு.

எழுதியவர் : மருத கருப்பு (27-Jul-20, 1:28 pm)
பார்வை : 327

மேலே