காத்திருக்கிறது நானிலம்

ஏய் கொரோனா
ஏன் இன்னும் அகலவில்லை
அகிலத்தை விட்டு ?
ஏனிந்தக் கொடூரம்
யார் மீது கோபம் உனக்கு
மண் மீதா மக்கள் மீதா ?

உடலோடு உறவாடி
உயிரிடம் விளையாடி
கொல்வதும் ஏனோ ?
மானிட வாழ்வுனக்கு
மலிவாய் ஆனதேனோ
உயிர்பலி உணவானதோ !

முடிவும் உனக்குண்டு
முடிகின்ற வாழ்வுனக்கு
வருகிறான் வீரனவன்
விரைவில் உனைவீழ்த்த
தடுப்பூசி வடிவத்தில்
தற்காப்பு ஆயுதமவன் !

மறைந்தனர் பல்லாயிரம்
உறைந்தனர் உலகத்தார் !
வருத்தமும் துக்கமும்
வழிகிறது உள்ளங்களில் !
மாறிவிடும் நிலையென்று
காத்திருக்கிறது நானிலம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Jul-20, 9:51 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 217

மேலே