மழை மேகம்
கவிதைமணி தந்த தலைப்பு
" மழை மேகம் "
கவிதைமணி நன்றி
○○○
மழை மேகம் கண்ணில் பட்டாலே
பிழைக்க யோகம் பிறக்க போகிறது உழைக்கும் நோக்கம் முறுக் கேறும் அழைக்கும் கடவுள்களை வலிமறந்து தழைப்பில் தேக்கம் நுழையாதிருக்க
□
கிரகத்தில் ஒன்பது வகைகள் போலவே மேகத்தில் ஒன்பது வகைகள் உண்டாம்
பூப் பொன் மணி ப்பனி மண் நீர் மழைப் பொழிய மானிடத்து ஒன்பது துளையுள் ஒன்று பழுதாகு மேயானால் முடமாகும்
□
மேகத்திலும் ஒன்று செயலிழக்க நேரும்
வாயுமேகமதை வாகனப்புகை மூடிவிட பனியில்லை நீரில்லை மழையில்லை காலப்போக்கில் வாழ்வே யில்லை ஏன் உயிரே வாழவேறு வழிவகை இல்லை
□
என்றாகும் நிலைவந்து நிலைத்துவிடும்
□
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்