மழை மேகம் 2

கவிதைமணி தந்த தலைப்பு
" மழை மேகம் " 2
கவிதைமணி நன்றி
○○○

மழைமேகம் பாட்டாளியின் கூட்டாளி,
மதித்தால் உயிரையேக் கொடுக்கும்
இல்லையேல் உயிரையே எடுக்கும் கோவக்காரனுக்கு கோவம் காட்டும்
சாந்தமானவனுக்கு புள்ளப்பூச்சியது

இதயத்தில் ஈரமுள்ளது ஈரத்தைக் கலக்கும் மண்ணின் சாரத்தை பிழிந்து பசுமையதன் பங்காளிக்கு வயிறாற ஊட்டிவிடும் தென்றல் வந்து தலாட்டும்
உரிமை உள்ளவரை உறங்க வைக்கும்

கடங்காரன் கழுத்தை நெறித்திடாமல்
முப்போக யோகத் தியாகத்தை செய்து
சோகத்தை அடையவிடாது காத்திடும்
கார் மேகத்திற்கு சுமையான மழைநீரை
இறக்கி வைத்தப்பின் இளைப்பாறுமோ
இல்லையோ விவசாயிகள் ஆனந்தம்
°°°°°°°°
சகாய மேரி வேளாங்கண்ணி
அரியலூர் திருக்கை

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (6-Aug-20, 1:16 pm)
பார்வை : 95

மேலே