வேண்டும் மகாத்மா நேரு

வார்த்தைகளின் ஜாலத்தால் வாராத சுதந்திரம்
வேற்று கோஷங்களால் பெற்றிடாத சுதந்திரம்
செங்குருதியாலும் செதுக்கப்பட்ட சுதந்திரம்
பெரும்வியர்வையாலும் விளைந்திட்ட சுதந்திரம்
வளர்ச்சி மலர்ச்சி என்று வெற்று கனவாகுமோ?
வியக்கிறது உலகம் மயக்குகிறது தாயகம்
என்றால் வேலை வாய்ப்புகள் பல்கி பெருகுமா?
கோடானு கோடி தியாகசெம்மல்கள்
செதுக்கிய சுதந்திர பாரத தாய்
சொல்லாடலும் விரலாட்டலும் மிஞ்சும்
வஞ்சக வல்லாடலும் சிதைக்கும் நிலைபோகுமோ?
சாந்தியை ஆயுதமாக்கிய காந்தியையே
ஆயுதத்தால் வீழ்த்தி நன்றிமறந்த நாய்களானோம்.
வெற்று ஏச்சுக்கும் வெறுப்பு பேச்சுக்கும் விலை போய்
காற்றில் கத்திவிட்டு கனவில் உலா வருகிறோம்.
மீண்டுமொரு மகாத்மா மண்ணில் மலரவும்
வேண்டுமொரு நேதாஜியும் நேரு சர்தாரும்.

எழுதியவர் : து. கிருஷ்ணமூர்த்தி (15-Aug-20, 9:53 pm)
பார்வை : 65

மேலே