அந்த வீதியில் ஏதோ ஒரு வீடு

அந்த வீதியில்
ஏதோ ஒரு வீடு
யார் வந்தாலும் திறந்து கொள்ளும்
அதன் கதவுகள்
இரவின் எச்சில்கள் எழுதும்
தன் வாழ்க்கையை
பகலின் கண்ணீர்த்துளிகளில்
எழுதிக்கொண்டிருக்கிறாள் அவள் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Aug-20, 6:43 pm)
பார்வை : 806

மேலே