கரோனா விழிப்புணர்வு

----------------------------------------
கருணையற்ற கரோனாவை முதலில் முழுதுமறிந்து கொள்..
கடும் வேகத்துடன் பரவும் கிருமியிது தெரிந்து கொள்..
உன் முகத்துவாரங்கள் வழியுன்னுள் நுழையுமுனுணர்ந்து கொள்..
நம் சுத்தமிதை தூர துரத்துமென்று கற்று கொள்..

வழலை நுரை நுரைக்க கைகளிரண்டை கழுவி கொள்..
கரத்தை கட்டுப்படுத்தி முகம் தொடாமல் பார்த்து கொள்..
முகமூடி அணிந்து உன்னுயிரை காத்து கொள்..
கூட்ட நெரிசலிடத்தை கூடியவரை தவிர்த்து கொள்..

இருமல் தும்மலையுன் கைக்குட்டைக்குள் ஒளித்து கொள்..
யாரிடமுமெங்கும் நீ ஆறடி விட்டு விலகி நில்..
நோயுணர்வில் நீ தனித்திருந்துன் சமூகத்தை வாழ சொல்..
அரசாணையேற்று வாசலடங்கியுன் குடும்பமதை காத்து கொள்..
----------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (19-Aug-20, 6:33 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 45

மேலே