பாட்டாளி
பாட்டாளி!
அவனுக்கு
பசி வயிற்றில் தோண்டிய பள்ளத்தால் தானாய்
மேடானது முதுகு !
அவன்
பசித்த வயிற்றால்
மட்டுமே தணிக்க முடிகிறது
குடும்பத்தின் பசியை!
அவன் வேர்வைகளே
நீருற்றிப் போகின்றன
உழைப்பின் வேர்களுக்கு!
விடிவதும் அடைவதும் அறியாது
தனைக் கழித்துச் செல்கின்றன
அவன் பொழுதுகள்!
சு.உமாதேவி