அவள் கண்கள்
அவள்முதல் முதலாய் என்னைப் பார்த்தபோது
அவள்பார்வையில் என்பார்வை சேர்ந்தபோது அவளும்
நாணிகோணி ஒருமூலையில் நின்று எனைப்பார்க்க
அவள்கண்களில் மானின் மருளுள் விழிகண்டேன்
இன்றோ அதே கண்கள் எனைக்கண்டு என்பார்வைக்கண்டு
கண்கள் கயலாய் மாறி துள்ளக்கண்டேன்
அதுமீண்டும் மீண்டும் என்னைபார்க்க துடிக்கும்
ஆவலின் ப்ரதிபிம்பமா என்று நான் நினைத்து
அவள் புன்முறுவலை ஏற்று அருகே செல்ல
அவள்விழிகள் தாமரையாய் அகல விரிந்து
அப்படியே என்னை மயக்கிட இதோ
நான் வண்டாய் மாறினேன் அவள்
கண்களில் கொஞ்சம் நெஞ்சம் வைத்து உறங்கிட