வலிகொண்ட நினைவும் சுகம்தானடி 555

என்னுயிரே...


என் கைகளில்
இருக்கும் தழும்பை...

யாரேனும் கண்டு
காரணம் கேட்டால்...

நான் விழுந்து எழுந்த
நினைவுகளை கூறுவேன்...

என் உள்ளத்தில்
இருக்கும் காயத்தினை...

என்னையின்றி யாரும்
அறிந்திட போவதில்லை...

தினம் நானே
நினைத்து பார்க்கிறேன்...

காதலில் ஏற்பட்ட காயத்திற்கு
நீ மட்டுமே கரணம் இல்லை...

காகித கப்பலில் கரையோர
முடியாது என தெரிந்தும்...

பயணிக்க ஆசை பட்டது
என் தவறுதான்...

தெரியாமல் தவறி விழுந்து
ஏற்பட்ட தழும்பும்...

வலிதான் காதலென தெரிந்தே
காதலில் ஏற்பட்ட வலிக்கும்...

காற்றில் என் ஜீவன்
கலக்கும்வரை...

எனக்கு நினைவு
படுத்திக்கொண்டே இருக்கும்...

உன்னையும்
உன் அன்பையும்.....


முதல் பூ பெ.மணி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (24-Aug-20, 10:16 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 702

மேலே