உறவுகள் பலவிதம்

பாசம் வைத்தாற்ப் போல் நடித்து
வேசம் போடும் நம் உறவுகள் நமக்கு காயம் ஆன பின்னர் தான் மாயம் ஆவர்கள் அதிலிருந்து..! அவர்கள் மொழியின் பொருள் புரியும் முன்னே நம் கண்ணை கலங்க வைத்துவிடுவார்கள். என்னச்செய்வது நாம் கடக்கவியலாத ஆற்றின் பாதையில் தான் நடக்க வேண்டியுள்ளது.. கண்கூசும் ஒளியும், நடைபிறளும் நேரமும், மூழ்கடித்துவிடுமோ! என்று ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும் என்றச் சிந்தனையுடன் சோகத்தைக் கொண்டு நடக்கையில் நீண்டுதான் செல்கிறது ஆறு. வலிகளே வாழ்வின் வழித்துணை என்னும் எண்ணத்தை விடுத்து, வழிக்காட்ட என் இறைவன் என்னுடன் என்ற நம்பிக்கையை நமக்குள் உருவாக்குவோம்...

✍🏻பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (30-Aug-20, 10:57 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : uravukal palavitham
பார்வை : 1339

மேலே