மீண்டும் மீண்டும் காதல் செய்வேன்

நீ உலகில் அழகானது எது சொல்?
என நீ கேட்க
கேள்வியின் முதல் எழுத்து
என நான் சொல்ல..!
இதழ் சுழித்து
விழி சுருக்கி
ஓரக்கண்னால்
நீ சிரிக்க..!
சட்டென சிவந்த
பூமுகம் சிந்திய வெட்கப் பூக்கள்
மீண்டும் மீண்டும்
எனை உன்மேல்
காதல் கொள்ளச் செய்யுதடி..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (10-Sep-20, 1:24 pm)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 334

மேலே