மாலை சூடவா

பூமியில பொறந்தவளே
பூச் செடியா வந்தவளே
உசுரோட நீ இருந்தும்
ஒத்தையில நிக்கிறியே !

தலையில பூவில்ல
நெற்றியில ஒன்னுமில்ல
ஏண்டி உனக்கிந்த நிலை
என்னடி உன் மனக் கவலை ?

மண்ணில் வாழ் மாந்தருக்கு
மங்கள வாழ்வு தரவா ! – இல்லை
மாயவனிடம் மனத்தை பறிகொடுத்து
மாலை சூடவா?

எழுதியவர் : கோ. கணபதி. (18-Sep-20, 9:34 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 27

மேலே