புன்னகை சிந்திய அழகில்

தென்றல் தந்த வரவேற்பில்
-------தோட்டத்தில் நுழைந்தாள்
புன்னகை சிந்திய அழகில்
------பூக்களும் அவளை வரவேற்றன
நன்றி நவின்று விடை பெற்றாள்
------ப்ளீஸ் இன்னும் சற்று நேரம் நில்
என்றன தென்றலும் மலர்களும் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Sep-20, 8:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே