மீண்டும் எழுத்தில்

என்றோ ஒரு நாள்...
எழுத்திலே விழுந்தேன்
எழுத்திலே கலர்ந்தேன்
எழுத்தாலே எழுந்தேன்...

என்றோ ஓர் நாள்..
எழுத்தை துறந்தேன்
என்னையே மறந்தேன்
எங்கெங்கோ போனேன்..

என்றாலும்..
என்னுள்ளே எழுத்து
எங்கோ துயிலில்
என் பார்வையை விட்டு..

இன்று..
துயில் துறந்து..
தூரிகை பிடித்து
பதிவுகள் பல
படிப்படியாய் வர
வரம்வேண்டும்.. உங்கள்
கரம் வேண்டும்
எழுத்து நட்புக்களே..
எழுத்து நல் பூக்களே...!

நட்புடன்
குமரி பையன்..

எழுதியவர் : குமரி பையன் (21-Sep-20, 4:00 pm)
பார்வை : 364

மேலே