அகம் காட்டும் முகம்

ஒவ்வொருவருடைய குணநலன்கள் , செயல்கள், இருக்கும் சூழல்களுக்கு தகுந்தவாறு முகத்தோற்றத்தில் நாளடைவில் மாற்றம் ஏற்படும்.....

தியானத்தில் இருக்கும் யோகிகள் முகத்தில் ஒருவித சாந்தமும், அவர்கள் கண்களில் ஒரு ஒளியும் இருக்கும்...
ஞானத்தை போதிக்கும் குருக்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் முகத்தில் ஒரு திவ்விய வசீகரம் இருக்கும்.....
சில மூத்த கண்டிப்பான ஆசிரியர்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும் , அவர்கள் ஆசிரியர்கள் என்று.....
எப்போதும் சண்டை அடி உதை என்று இருப்பவர்கள் முகத்தில் ஒரு முரட்டுத்தனம் குடியேறிவிடும்....
வாழ்க்கையில் எல்லாவற்றிர்க்கும் போராடி போராடி வாழும் பெண்கள் முகத்தில் ஆண்மைத் தோற்றம் தென்படும்....
சொகுசாக , நினைத்த எல்லாம் கைகூடும் வாழ்க்கை வாழ்பவர்கள் முகம் பொலிவாக புன்னகை தழும்ப காட்சி தரும்....
எதற்கெடுத்தாலும் ஊரை வம்புக்கு இழுத்து வாய்ச்சண்டை போடும் பெண்கள் முகத்தைப் பார்த்தவுடன் சொல்லிவிடலாம் ...இவர் சரியான சண்டைக்கோழி என்று....
எதற்கெடுத்தாலும் எரிச்சல் படுபவர்கள்..கடுகடுவென இருப்பவர்கள், கோபப் படுபவர்கள் முகம் மென்மைத் தன்மையை இழந்து சாந்தம் இழந்து கனன்ற எரிமலைப்போலவே இருக்கும்......
வறுமையும் செல்வமும் முகத்தில் பிரதிபலிக்கும் ....
தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் முகத்தில் ஆளுமை தலைதூக்கி இருக்கும்....
நேர்மையின் பாதையில் செல்பவர்கள் முகத்தில் மிடுக்கும் கம்பீரமும் தாண்டவம் ஆடும்......
யாரை எப்படி ஏமாற்றலாம்?யாரை எப்படி கவிழ்க்கலாம்? யாரிடம் எவ்வளவு தேறும் என்று எப்போதும் கூட்டிக் கழித்து கணக்கும் போடுபவர்கள் முகத்தில் ஒரு குள்ளநரிப் பார்வை இருக்கும்....
நிறையக் கற்ற அடக்கம் பண்புள்ள மேதைகள் முகம் அறிவொளி வீசும்....
அலட்டல்கள் முகத்தில் மந்தகாசம் தெறிக்கும்.....
எல்லோருக்கும் எப்போதும் உதவிக்கரம் நீட்டும் நல்ல உள்ளங்கள் முகத்தில் அன்பு ததும்பும்......
எதையும் கூர்ந்து பார்க்க வேண்டிய பணியில் இருப்பவர்கள் முகங்களில்... கண்கள் சுருங்கி... நெற்றியில் சுருக்கம் ஏற்படும்......
வெகுநாட்களாய் மூக்குக் கண்ணாடி அணிபவர்கள் கன்னங்கள் இலேசாய் உயர்ந்து...விழிகள் குழிக்குள் இருப்பதுபோல் தோற்றம் தரும்.......

எப்போதும் சாந்தமாக நற்சிந்தனைகளோடு இருப்போம்....
தேவையில்லாது கோபப் படுவதை தவிர்ப்போம்....
அண்டை அயலாருடன் நட்புடன் பழகுவோம்....
எதிரிகளை மன்னிப்போம்....
இருப்பதில் திருப்தி அடைந்து மகிழ்வோம்.....
முகம் எப்போதும் ஒளிவட்டத்துடன் பொலிவாய் காட்சி தரும்...

எழுதியவர் : வை.அமுதா (23-Sep-20, 1:52 pm)
Tanglish : agam kaattum mukam
பார்வை : 241

மேலே