முதுமொழிக் காஞ்சி 95
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான். 5
- தண்டாப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொழிப்புரை:
வாழ்தலை மேன்மேலும் விரும்பிய ஒருவன் தான் எடுத்த தொழிலை ஆராய்தல் ஒழியான்.
பொருளுரை:
நல்வாழ்க்கையை மேன்மேல் விரும்புமவன் எடுத்த தொழிலைத் தக்கவரோடு ஆராய்ச்சி செய்தலைத் தவிர்க்க மாட்டான்.
நல்வாழ்க்கைக்கு அவசியமானது காரியசித்தி: ஆகவே எடுத்த காரியம் நன்கு முடிதற்கான ஆராய்ச்சிகளைச் செய்வது ஒருதலை.
'தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்(கு)
அரும்பொருள் யாதொன்றும் இல்.' - திருக்குறள்.