காந்தி தேசமே

காந்தி மகானே நீ பாடுபட்டு
வாங்கி கொடுத்த சுதந்திரம்
இன்று நாட்டில் ஒரு சிலரின்
கையில் மட்டுமே உள்ளது

காந்தி மகானே உன்னுடைய
பிறந்த நாளில் உன்னை வணங்கி
நாங்கள் வேண்டி கொள்வது

உன் முகத்தில் தவழும் புன்னகை
எங்கள் எல்லோர் முகத்திலும்
தவழ அருள் புரிய வேண்டும்.

உன் தவழும் புன்னகையுடன்
அச்சடித்த பணம் இந்த நாட்டில்
ஒரு சிலரின் பைகளில் என்ற
நிலைமாறி எங்கள் கைகளிலும்
இருக்க அருள் புரிய வேண்டும்

காந்தி மகானே நீ கனவு கண்ட
கிராம சுயராஜ்ஜிய கனவு
இன்னும் இந்திய திருநாட்டில்
கனவாகத்தான் இருக்கு...!!!

நீ மீண்டும் பிறந்து வந்தாலும்
நான் மகான் அல்ல என்று
சொல்லி அஹிம்சா தர்மத்தை
விட்டுவிடும் நிலை வந்துவிடும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Oct-20, 9:55 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 1990

மேலே