இறக்கி வைக்க முடியாத சுமைதான் நீ 555

***இறக்கி வைக்க முடியாத சுமைதான் நீ 555 ***


உயிரானவளே...


நீயும் நானும் ஈருடல் ஓருயிராய்
இருந்த காலங்களை மறந்து விட்டாயா...

உன் எதார்த்த சந்திப்புகளில்
என் நலம் கேட்கிறாய்...

உன்னை எனக்கு
நினைவிருக்கா என்று...

எனக்கு உன்
நினைவுகள் தானடி உயிர்...

இதயத்தில்
இருக்கும் உன்னையும்...

எனக்குள் இருக்கும்

உன் நினைவுகளையும்...

இறக்கி வைக்க முடியாத
சுமைதான் நீ போன பின்பும்...

சிலகாலம் உனக்கு
உலகமாக நான் இருந்தேன்...

உலகத்தை
நீ மறந்துவிட்டாய்...



உலகம்
உன்னை மறக்கவில்லை...


நீ பிரிந்து
சென்ற நாட்களைவிட...


இன்று
நீ கேட்ட வார்த்தை...

என்னை
முழுமையாக
கொன்று விட்டதடி.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (3-Oct-20, 5:05 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1183

மேலே