என் கவலை
நம் காதல் தோல்வியை
தழுவிய போது ஏற்பட்ட
வலியை கூட நான் ஓரளவு
பொறுத்துக்கொண்டேன்
ஆனால்,, என் கவலையே
என் மனதோடு ஒட்டியுள்ள
உன்னை பிரித்து எடுப்பது
எப்படி என்பதுதானே..!!
இதுவும் கடந்து விடும்
என்று சொல்பவர்கள்
என் கவலை தீர ஒரு வழி
சொல்வார்களோ...!!
--கோவை சுபா