தொடரும் இரவு போதும்
உங்கள் அனுதாபங்களோ
ஆறுதல் வார்த்தைகளோ
எனக்குத் தேவையில்லை
என் சோகத்தின் வடிகாலாய்
துடிக்கும் இதயம் இருக்க
என்னை தனிமையில் விடுங்கள்
கண்கள் வடிக்கும் கண்ணீரின்
சுவையை உதடுகள் ருசி பார்த்திட
தடை போடாதீர்கள்
என் வலியை நீங்கள் அனுபவிக்க
முடியாது என்ற உண்மையை
நான் நன்றாக அறிவேன்
எனக்காக பரிதாபப்படுவதாக
உங்கள் மிகைநடிப்பை இனியும்
தொடராதீர்கள்
விடியும் வரைக்கான நேரமும்
காலமும் என் கையில் இருக்க
நான் எப்படியும் மீண்டு
எழுந்திடுவேன் சோகத்திலிருந்து...