நாவல் நாயகி அர்ச்சனா

கதை முழுவதும்
விரவிக் கிடக்கும் காதலை
இப்போது நான் தாங்கிக்கொண்டு
இருக்கிறேன் என்பதே பெருமகிழ்ச்சி

கதையில் காதல் வசனங்கள்
வெகு இயல்பாக எழுதப்பட்டிருப்பது
என்னை வெகுவாக ஈர்த்திட
நானும் ஆனேன் கதை நாயகியாய்

ஒன்றிரண்டு கூடவோ குறையவோ
செய்யலாம் கதையில் காதலர்கள்
பகிர்ந்து கொண்ட முத்தங்கள்
அது என் வாசிப்பின் ரசனையே

கற்பனை கதை என்றாலும்
என்னுடைய வாழ்வை ஒத்திருப்பதால்
மனது எப்போதும் கதாநாயகி
அர்ச்சனாவாக காற்றில் மிதக்கிறது

கதையின் முடிவு எப்படி இருந்தாலும்
அதை நான் படிக்கப் போவதில்லை
இதுவரை படித்த மயக்கத்திலே
வாழ்வை ரசனையாக வாழுவேன்...

எழுதியவர் : மேகலை (10-Nov-20, 1:36 am)
சேர்த்தது : மேகலை
பார்வை : 120

மேலே