களவதிகாரம்

பரவும் இருளில் படர்ந் தூர்தல்
தொடரும் இடரில் தொலைந்து போதல்
சுடரும் யாக்கைச் சுமையென களையத்
துணிவது ஆணது பிறவிச் சாபம்!,

இடையின் னிடையே இமைகள் இருகிட
இசையின் வழியே இயல்வது பொண்ணாம்
வசையில் மொழிவது வாத்திய மாகும்
வாடிடும் விளிம்பில் வளர்வது விடையே!,

நாற்கரம் இணைதலே நாளது தொடர
நாணிச் செழிக்கும் நாளதும் மீளும்
பேணிக் காத்தால் பெரும்புகழ் பெறுவர்
பேதமை தொலைத்து பேறுபல பெறுவர்!,

உடலும் கூடலும் உள்ளது காதல்
தேடலும் தொலைதலும் மீள்வதும் அதனால்
அழகில் மிளிரும் அறுசுவை யூறும்
அன்பினை மட்டுமே அடைவது நன்றாம்!,

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (10-Nov-20, 9:02 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 89

மேலே