ஆழ்மனம் எதிர் சுழல் மனம்

எங்கே போகிறாய்.... 
என்று கேட்டது... 
ஆழ்மனம்...... !

தெரியாமல்..... 
தத்தளிக்கிறேன்.... 
என்றது சுழல்மனம்..... !

என்னோடு வா.... 
என்றது ஆழ்மனம்...... !

உன்னோடு வரமாட்டேன்..
என்றது சுழல்மனம்..... !

என்னோடு இணைவதே.. 
உன் பிறப்பின் நோக்கம் 
என்றது ஆழ்மனம்.... !

உன்னோடு வந்தால்.. 
என்னை சித்தனாக்கி... 
விடுவாய் என்றது... 
சுழல் மனம்..... !

அதனால் என்ன..? 
என்றது ஆழ்மனம்... !

அதற்கு வயது இருக்கிறது
என்றது... 
சுழல்மனம்.... !

சிரித்து கொண்டே... 
அடங்கியது.... 
ஆழ்மனம்...... !!!

@
கவிப்புயல் இனியவன் 

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Nov-20, 9:30 am)
பார்வை : 79

மேலே