நெஞ்செமெல்லாம் வெண்மேக மோதலடி

பட்டு போல் மென்மை முகம் உனக்கு
பால் போன்ற வெண்மை நிறத்தோடே
பளிர் என்று கு.ழந்தை சிரிப்பைக் காட்டி
பதை பதைப்பை நெஞ்சில் ஏற்றி
திடீர் காதலை திகிலென உருவாக்கி
உறங்கும் போதும் உன்னை நினைக்க வைத்து
உப்பின் சுவையையும் இனிக்க வைத்தாய்
மணக்கும் மலர்கள் எங்கும் உன் முகமாய்
மாலை நேரம் வந்தால் மனம் பலமிழந்ததாய்
சுருள் முடி முகத்தில் சுழன்றவாறு நீ செல்கையில்
சூட்டுத் தண்ணீரில் துடிக்கும் பாம்பாய் நான்
அருகில் வந்து பேரதிர்ச்சி தந்தாய் நீயடி
கரம் பற்றி காதலை ஏற்றக்கொண்டாய்
பாலை நிலத்தில் பனிப்பாறையாய் என் மனம்
நெஞ்செமெல்லாம் வெண்மேக மோதலடி காதலியே.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Nov-20, 5:47 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 84

மேலே