அம்மா
பிள்ளைபெற்றவளோ ஒருதினமே
வலியால் துடித்தாள்
பெறாத பிள்ளைக்கு
அனுதினமும் வலியால் துடித்தாள்
அவளோ
ஏறாத கோவிலுமில்லை
வேண்டாத தெய்வமுமில்லை
பார்க்காத மருத்துவமில்லை
உண்ணாத மருந்துமில்லை
இத்தனை செய்தும்
ஏனோ பிள்ளைவரம் மட்டும் கைகூடவில்லை
"ம்மா " என்ற
இன்னிசையில் தத்தளித்து
திரும்பியவள்
கண்ணீர்மல்க கட்டி தழுவி
முத்தமிட்டாள் மா என்றழைத்து
தாயாக்கிய பசுவை
-இணையத்தமிழன்