அம்மா

பிள்ளைபெற்றவளோ ஒருதினமே
வலியால் துடித்தாள்
பெறாத பிள்ளைக்கு
அனுதினமும் வலியால் துடித்தாள்

அவளோ
ஏறாத கோவிலுமில்லை
வேண்டாத தெய்வமுமில்லை
பார்க்காத மருத்துவமில்லை
உண்ணாத மருந்துமில்லை
இத்தனை செய்தும்
ஏனோ பிள்ளைவரம் மட்டும் கைகூடவில்லை

"ம்மா " என்ற
இன்னிசையில் தத்தளித்து
திரும்பியவள்
கண்ணீர்மல்க கட்டி தழுவி
முத்தமிட்டாள் மா என்றழைத்து
தாயாக்கிய பசுவை
-இணையத்தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (30-Nov-20, 6:43 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : amma
பார்வை : 1362

மேலே