தீபஒளி திருநாள்

இரவும் பகலாய் மின்னிட
பெரியோர்கள் புத்தாடை உடுத்திட
வாண்டுகளோ வண்ண ஆடை உடித்திட
விடலயார் வேட்டும் வெடிதிட
கைகளில் மின்னிடும் மத்தாப்பும்
வீதியில் கேட்டிடும் வேட்டுச்சத்தம்
வானிலே சிதறிடும் வாணவேடிக்கை
என ஊரே விழாக்கோலம்பூண்டிருக்க
வானமோ வானவில்லாய் வண்ணமிட

நானோ இங்கேயே
என் உழைப்பின் வெளிப்பாட்டில்
கொண்ட ஆனந்தம் கண்டேன்
சிரிப்பையும் தொலைத்தேன்
சிதைந்தும் நின்றேன்
வேட்டிற்க்கு வண்ணம் பூசிட
எந்தை குருதியும் சிந்திட
கிருஷ்ணனும்( எந்தை)மாண்டான்
அன்று
கிருஷ்ணன் நரகாசுரனை வென்றதற்கு
இன்றோ பதவி உயர்வும் பெற்றேன்
பாடசாலையிலிருந்து பட்டாசு ஆலைக்கு
இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்
இப்படிக்கு பட்டாசுத்தொழிலாளியின் மகன்
- இணையத்தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 3:48 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
பார்வை : 212

மேலே