தன்னம்பிக்கை கவிதை

💪💪💪💪💪💪💪💪💪💪💪

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

💪💪💪💪💪💪💪💪💪💪💪

மண்ணைத் தொடாத
மழையும் இல்லை
கரையைத் தொடாத
அலையும் இல்லை
கண்ணீரைத் தொடாத
கண்களும் இல்லை
குழந்தையை தொடாத
கைகளும் இல்லை
தோல்வியை தொடாத
வெற்றியும் இல்லை....!

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

மரத்தின் வாழ்க்கை
வேரில் உள்ளது
பறவையிின் வாழ்க்கை
சிறகில் உள்ளது
மொழியின் வாழ்க்கை
நாவில் உள்ளது
மலரின் வாழ்க்கை
மணத்தில் உள்ளது
மனிதனின் வாழ்க்கை
இலட்சியத்தில் உள்ளது...!

👊👊👊👊👊👊👊👊👊👊👊

பொன்னை இழந்தாலும்
பொருளை இழந்தாலும்
மண்ணை இழந்தாலும்
மனையை இழந்தாலும்
சொத்தை இழந்தாலும்
சுகத்தை இழந்தாலும்
பணத்தை இழந்தாலும்
பந்தத்தை இழந்தாலும்
தொழிலை இழந்தாலும்
தோழனை இழந்தாலும்
நீ ஏழையே! அல்ல
உன்னிடமுள்ள
"தன்னபிக்கையை" இழக்காத வரை...!!

👉👉👉👉👉👉👉👉👉👉👉

நினைத்ததை
சாதிக்க முடியாமல்
போனாலும்...
சாதிக்க நினைத்ததை
தொடர்ந்து செய்...
அதுவும்
ஒரு சாதனை தான்...

👉👉👉👉👉👉👉👉👉👉👉

சித்திரத்தை தீட்டினால்
காகிதம் கூட பொக்கிஷமாகும்

சிலையாக வடித்தால்
கல் கூட கடவுள் ஆகும்

பக்குவப்படுத்தினாள்
பாலை கூட சோலையாகும்

முறையாகப் பயன்படுத்தினால்
குப்பைக் கூட உரமாகும்

லட்சியத்தோடு வாழ்ந்தால்
உன் வாழ்க்கை கூட
நாளை வரலாறாகும்....!

*கவிதை ரசிகன்*

💪💪💪💪💪💪💪💪💪💪💪

எழுதியவர் : கவிதை ரசிகன் (1-Dec-20, 9:12 pm)
பார்வை : 281

மேலே