தங்கை
தங்கை எனும் உறவாக,
தரணியிலே பிறந்தவளே..!!
உரிமை எனும் உறவாக,
உதிரத்தோடு கலந்தவளே..!!
சகோதர பாசம் அதை,
சகாசமாய் புரிந்திடுவேன்..!!
தோள்மீது தினம் சுமந்தே,
தோழனாக மாறிடுவேன்..!!
என் நிழல்களின் உருவமாய்,
எந்நாளும் நீயிருக்க..!!
எந்த துன்பம் வந்தாலும்,
எளிதாக தகர்த்திடுவேன்..!!
அண்ணா என்று சொன்னாலே,
ஆழ்கடலில் தூரெடுப்பேன்..!!
தங்கை உனை தாங்குவதே,
தவமாக தானிருப்பேன்..!!