காதல் கைதி

விழிப் பேசிய மொழியில்,
கவிப்பூ ஒன்று பூத்ததடி..!!
இதழ் அசைவில் விழுந்தே,
இதயத்தை உன்னில் தொலைத்தேனடி..!!
கிறங்கச்செய்யும் உந்தன் புன்னகை,
உறங்கவிடா இம்சை செய்யுதடி..!!
கற்பனை கனவில் நாளும்,
காலத்தை கடத்துவதா? நியாமடி..!!
புத்தனாய் வாழ்ந்த என்னை,
பித்தனாய் மாற்றியது ஏனடி..!!
மந்திர தந்திரம் இல்லா,
வசப்படுத்திய நாட்களும் போதுமடி..!!
சிறைபிடிக்கும் விழிகள் கொண்டு,
காதல்கைதியென சிறை பிடித்தாயடி!!

எழுதியவர் : ஆ.பிரவின் ராஜ் (5-Dec-20, 7:41 am)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
பார்வை : 297

மேலே