மனம் தேடிய தேவதை

என் கற்பனைகளில் மட்டுமே
வாழ்ந்துக் கொண்டிருந்தது
என் காதல்!


கன்னி உனை கண்டேன்
என் கருவிழி முழுதும்
ஆட்கொண்டாய்!
அப்படி ஒரு அழகு😍


நேற்றுவரை நான் கண்டதில்லை
இப்பூமிபந்தில் இன்று கண்ட
உன்போல் அழகு😘


சில அழகுகளைச் சொல்ல
வார்த்தைகள் தேவையில்லை..


உன்னில் வாழ்ந்து பார்க்கச் சொல்லி
நெஞ்சம் செய்கிறது ஆனந்த தொல்லை


அன்பான அகமழகி!
மஞ்சள் நிற முகமழகி!


பட்டென்று ஈர்க்கும் பார்வையில்
சாயும் மனம் ஒருபுறம்...
படபடவென்று பேசும் பேச்சில்
காயும் உயிர் மறுபுறம்...


இவ்விரண்டும் என் மனதிலிருந்து
காலத்திற்கும் மறக்காது கண்மணியே!


உனக்காக நான் செய்யும்
சின்ன சின்ன செயல்களில் கூட
என் காதல் அதிகமாக வெளிப்படுகிறது..


அன்பே!
என் மேல் உனக்கென்ன?
அத்தனை காதல்..
அத்தனை ஆசை..
அத்தனை பாசம்..
அத்தனை நேசம்..
நான் என்ன செய்தேன்?


உன்னை காணாமல் இருந்திருந்தால்
அன்பின் ஆழம் என்னவென்று
அறியாமல் அழிந்திருப்பேன்...


உன் அன்பு
இதுநாள்வரை நான் உணர்ந்திடாத
ஓர் புதுமை..


உன் அழகு
இதுநாள்வரை நான் கண்டாத
தங்கப் பதுமை..


என் அருகில் நீ இருந்தால்
என் வாழ்க்கை ஒரு இனிமை..


இனி தேவையில்லை
எனக்கு இந்த தனிமை..


இனி உனக்காக வாழ்வேன்
என் வாழ்க்கையின் மீதி பாகங்களில்..!


கவிதைகளின் காதலன்
❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 6:27 pm)
பார்வை : 5403

மேலே