என்னில் நீயானாய்

கனவா!
நினைவா!


நான் காண்பது புது உலகா!


என் கண்முன்னே
என் காதல் நிலவா!


கைகள் நீட்டி
என் கன்னம் தாக்கி!
கலர்பூசி நகரும்
அந்த விண்மீன் நிழலா!


உன் விரல் தீண்டிய பின்
என்ன நடந்தது என்று
எனக்கொன்றும் ஞாபகமில்லை!


அந்த நொடியில் இருந்து
என்னை ஏனோ காணவில்லை!


நீ எனை தேடித் தரும் வரை
வேண்டும் இந்த மயக்கநிலை!


என்னில் நீயானாய் போதும்
எனக்கொன்றும் வேறு தேவையில்லை!!!


கவிதைகளின் காதலன்
❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 6:26 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : ennil neeyanay
பார்வை : 473

மேலே