தியாகம்

தூய்மையான உள்ளம் கொண்டவள்
தூண போன்று எம்மை தாங்குபவள்
உன்னதமானவள் -எமக்கு என்றும்
உண்மையாய் இருப்பவள்
எண்ணில் அடங்கா எனக்காய் இன்முகத்துடன் ஏற்பவள்
இத்தனை போற்றுதலுக்கும் உரியவள் என் தாய்
நான் பேரின்பம் கொள்கிறேன்
எப்பொழுதெனில் - என்னால் அவள் முகத்தில் புன்னகை ஏற்படச் செய்யும் பொழுது
என்றும் உன் அரவணைப்பில் நான் தாயே

எழுதியவர் : தீபிகா. சி (3-Jan-21, 7:36 pm)
சேர்த்தது : தீபிகா சி
Tanglish : thiyaagam
பார்வை : 410

மேலே