மரியதாஸ் ஆனந்த்

அன்பு நண்பன் மரியதாஸ் ஆனந்த்..

தன் நிழலைக் கூட நேர்த்தியாக
வைத்திருக்கும் வித்தை கற்றவன்..

நிறைய அன்புக்குச் சொந்தமானவன்..
நிறைவாய் சிந்திக்கத் தெரிந்தவன்...

நிஜங்களைப் பேசக்கூடியவன்..
நிதானத்தைக் கடைப்பிடிப்பவன்..

மரியதாஸ் ஆனந்த்...
ஆனந்தம் என்றும் வசப்பட
வாழ்க பல்லாண்டுகாலம்... அது
வளங்களின் வசந்தகாலம்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

நெஞ்சத்தில் உற்சாகம் சுமந்து
முகத்தில் புன்னகை கொண்டு
இனிப்புகளை.. பூக்களை...
பூங்கொத்துகளை வழங்கி
கரங்கள் இரண்டும் குவித்து
கனிவுடன் வாழ்த்துகிறேன்...

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-Jan-21, 2:57 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 127

மேலே