வாழும் செயல் = கட்டளைக் கலிப்பா
மனித ரற்றவர் மத்தியில் நிற்பினும்
மனித னாயுனை மாத்திரம் மக்களும்
தனிமை யாகவே தானறி வாரெனில்
தலைவ ணங்குதல் தானுனை யேயொரு
புனித னாக்கிடும். பூமியும் போற்றிடும்.
புடமு மிட்டுனைப் பொன்னென மாற்றிடும்.
இனிய வார்த்தைகள் இன்னிசை மாமழை
இதழில் பெய்யுமுன் இன்செயல் வாழுமே