உன் கொலுசின் ஓசைகள் புல்லாங்குழல் ஆனதோ 555

***உன் கொலுசின் ஓசைகள் புல்லாங்குழல் ஆனதோ 555 ***


என்னுயிரே...


ஓடும் நதியில் முகம்
கழுவ நானிறங்க...

தொலைவில்
பாவைகள் கூட்டம்...

என் பாதம் தொட்டு சென்ற
நதிநீரில் வந்தது...

உன் வெள்ளி
கொலுசின் ஓசைகள்...

உன்னைக்கான ஓடிவந்தேன்
ஆவலோடு...

உன் தோழியோடு ஆடைகளையாமல்
நீ நீராடிக்கொண்டு இருக்க...

உன் கால்களில் மட்டும்
ஏனடி வெள்ளி கொலுசுகள்...

நீ எனக்கு அனுப்பிய
காதல் ஓசையோ...

நதிக்கரையில்
வளர்ந்திருக்கும் நாணலில்...

உன் கொலுசின் ஓசைகள் உட்சென்று
புல்லாங்குழல் இசை ஆனதோ...

உன்
மேனித்தொட்ட நீரால்தான்...

கரையெல்லாம் வண்ணமலர்கள்
பூத்து குலுங்குதோ...

பூத்து குலுங்க வேண்டும்
என் வாழ்வும் உன்னால்...

உன் உள்ளம் களவாடி
நான் ரசிக்க வேண்டும்...

உன் அங்கமெங்கும்
என் காதல் நிலவே.....


*** முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (13-Feb-21, 9:30 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 417

மேலே