ஏக்கம்
காண்பது பகல் கனவோ
வின்வெளியில் நீயும் நானும்…
நடந்து செல்லவில்லை
மிதந்து செல்கிறோம்…
மின்னும் அனைத்தும்
நம்மை நகலெடுத்தது…
காணும் யாவும் நாமாய்
கடந்து வர மனமில்லை…
நிழலும் நீங்காமலிருக்க
கனவை கலைத்து விடாதே…
கனவே நீண்டுவிட்டால்
விடியலே தேவையில்லை…