அவள் ஜெயித்தாள்
"சிரித்தாள்! அவள் இன்று சிரித்தாள் !
சிரித்தாள்! மனம் விட்டு
சிரித்தாள்!
நினைத்ததை முடித்ததில் சிரித்தாள்,
முடித்ததில் ஜெயித்ததால் சிரித்தாள்.
அடுப்பில் கனவை சமைத்து,
இடுப்பில் குழந்தையை
சுமந்தாள்.
கடமையில் துணிகளை
துவைத்து,
மனதில் ஆசையை
சுவைத்தாள்.
அவள் உருவம் கண்டது
இரு வாழ்வு ,
இதயம் கொண்டது ஒரு கனவு.
சிறகில்லா பறவை !
கொஞ்சமாய் திறந்தது கதவை!
புதிய வானம் தெரிந்தது,
அதில் இனிய ஞானம்
பிறந்தது.
கனவும் நனவும் இணைந்தது,
இதுதான் வாழ்வென்று நினைந்தது.
மறந்தது கவலை ,
பறந்தது வெளியே
கிணற்றுத்தவளை !
நினைத்ததை முடித்ததில் சிரித்தாள்,
முடித்ததில் ஜெயித்ததால் சிரித்தாள்."