பூவிதழ்நீ மெல்லத் திறந்து

தேன்தமிழ் உன்னிதழி னில்தவழ்ந்து வந்திடின்
என்னிதயத் தில்தேன்ம ழை !

செந்தமிழ்ப் புன்னகை ஒன்றினை நீஉதிர்த்தால்
என்னுள்ளே கற்பனைவா னம் !

பூவிதழ்நீ மெல்லத் திறந்துதமிழ் பேசினால்
ராகங்க ளும்மயங்கு தே !

சிந்தும் இளம்புன் னகைசிந்தும் தேனிதழ்
சிந்துதே செந்தமிழ்நெஞ் சில் !

முல்லையின் வெண்மைமுத் துக்களின் மென்வரிசை
புன்னகை உன்அடையா ளம்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Mar-21, 7:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே