அந்திவானம்
அந்திவானம்
மஞ்சள் போர்வைக்குள் அந்திவானம்
வெற்றிலை மென்றது போல் சிவந்த சூரியன்
பகல் பொழுதில் உன் கடமையை சற்றும் சலிக்காமல் செய்ததால் சிறு கலைப்பு உன்னிடத்தில்
கலைப்பாற்ற ஓய்வெடுக்க செல்கிறாயோ???
உன் உறக்கம் உலகையே உறங்க வைக்குமே
வாழ்க்கையின் ஒட்டு மொத்த தத்துவத்தையும் ஒற்றை செயலில் உணர்த்துகிறாய் பகலில் விடிந்ததும் இரவில் மறைந்தும்
வாழ்வென்பதும் அப்படிதானே
சில நாட்கள் இன்பம் என்ற விடியலாலும் சில நாள் துன்பம் என்ற இருளாலும் நிறைந்தது
பகலெல்லாம் உன் மகன்(சூரியன்) வழிகாட்டினான்
இரவிலும் எங்கள் தனிமையை நீக்க உன் மகளை(மதி) அனுப்பினாய்.
உன் கடமைக்கு விடியலாய்
காதலில் கடுங்குளிராய்
ஆனந்தத்தில் மும்மாரியாய்
வெட்கத்தில் சாரல் மழையாய்
புன்முறுவலில் மெல்லிய தென்றலாய்
கடுங்கோபத்தில் அச்சுறுத்தும் புயலாய்
என்றும் எங்களுக்காய் எங்கள் வாழ்வில் நீ