பார்வை கொலைகாரி நீ 555

***பார்வை கொலைகாரி நீ 555 ***


என்னவளே...


உன்னை பற்றி
நான் இப்போதெல்லாம்...


சிந்திப்பதே
இல்லை என்கிறாய்...உ

ண்மைதான் என்
சிந்தனையில் இருக்கும் உன்னை...

நான் ஏன் தனியாக
சிந்திக்க வேண்டும்...

காதல் பறவையாக
சிறகடித்து பறந்த போதே...

உன்னை சிந்திக்கவில்லை...

கணவன் மனைவி இன்றா
உன்னை சிந்திக்க போகிறேன்...

முதல் சந்திப்பில் உன்
பார்வை தோட்டாக்களால்...

என்னை கொலை
செய்தவள் நீ...

இன்றுவரை தினம் தினம்
வெவ்வேறு பார்வையால்...

என்னை
கொலை செய்கிறாய்...

பார்வை
கொலைகாரி நீ...

எப்படி என் சிந்தனையில்
இல்லமால் போவாய்...

என் சிந்தனையில் எல்லாம்
நீயே நிரம்பி இருப்பதால்...

தனியாக
உன்னை பற்றி...

சிந்திக்க தேவையில்லையடி
என் சகியே...


***முதல்பூ பெ.மணி..... ***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (31-Mar-21, 5:47 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 941

மேலே