நீதி தேவதை
கண் கட்டி நின்றாலும்
கட்டளை மீறாமல்
நீதியை கணித்து
கூறும் காந்தாரி நீ!
சாதி வெறி இல்லாமல்
சத்தியத்தின் வழியில்
அழைத்து செல்லும்
அகிலம் போற்றும்
தேவதை நீ!
ஒலி இல்லாமல்
இசைத்து ஒளி தரும்
ஓர் கருவெள்ளை
பூவாக இருக்கும்
கண்ணை கட்டி
தராசு கல்லை வைத்து
சரியாய் அழைத்துச்
செல்லும் கடவுளும்
நீ தானே!