உலகை கொரோனாவிலிருந்து

நீலநச்சை கழுத்தில் நிறுத்தி உயிர்தந்தாள் பார்வதி
நீலகண்டன் பாதியுடல் தந்தான் உயிர்தந்த பாவைக்கு
நீலக்கடல் நித்திலம்போல் சிரிக்கும் சித்திரப் பாவையே
நீலஆழி சூழ்உலகை கொரோனாவிலிருந்து காப்பாய் தாயே !

நீலநச் சுக்கழுத்தில் நிற்க உயிர்பெற்றான்
நீலகண்டன் பாதி யுடல்தந்தான் பார்வதிக்கு
நீலக்க டல்முத்துப் போல்சிரிக்கும் சித்திரமே
நீலவாழி சூழ்உல கைகொரோ னாவினின்று
நீலவிழித் தாயேகாப் பாய்

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
-----மேலே நெடிலடி கலித்துறை

எழுதியவர் : கவின் சாரலன் (18-Apr-21, 10:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே