வள்ளுவர் பின்னே குறளடியான் 2
கல்வி
1 ..
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவைஎன் பதறிந்து
நாடிச்செல் கல்பள்ளி யில்
2 .
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகபின்வே லைதேடி
பெற்றோர் தமைவாழ வை
3.
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகபின்உற் றார்மற்றோர்
பெற்றவர் போற்ற உயர்
இடுக்கண் அழியாமை
4
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்என் பதினால்
நினைத்து வருந்துதல் வீண்
மானம்
5 .
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடையாத லாலே
இழிசெயல் செய்தவர் கள்
----வள்ளுவர் குறட்பாவவை எடுத்தாண்டு அவர் ஈற்றடியில்
தொடர் சீர் அமைத்து எனது ஈற்றடியை பணிவுடன் வைத்து
வான்புகழ் வள்ளுவப் பெருந்தகைக்கு சிறப்பு செய்யும்
சிந்தியல் வெண்பா சிறு முயற்சி .
.