பேருந்து பயணத்தில்

அந்தி பொழுது
பேருந்தில் சன்னலோரம்
இனிமையான பாடலிசையில்
நனைந்தவாறு பயணம்
முகத்தை வருடி
செல்லுதே காற்று
வானில் ஆதவனின்
வர்ணஜாலம்
இடை இடையே
காதை பிளக்கும்
வாகனங்களின் ஹாரன் ஓசை
மலைகளும் மரங்களும்
மாயமாக கடக்கின்றதே!
மேம்பாலங்களில் செல்கையில்
உயர்ந்த கட்டடங்களை
பார்த்து வியக்கிறேன்
அதோ வானில்
வளர்பிறை கீற்றாய்
அது கூட என்னோடு
வழித்தூணையாய்
வருகிறதே!
யாரும் இங்கு
தனிமையில்
இல்லை ஏதோ
ஒன்றின் துணையுடன் தான்......

ஜோதி மோகன்
புதூர்

எழுதியவர் : ஜோதிமோகன் (5-May-21, 8:28 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 70

மேலே