எங்கே என் மின்மினிபூச்சிகள்

இருளில் மின்னும் வைரமே!
கோடைகால இரவு பொழுதில்
என் சன்னல் வழியே
உன்னைத் தேடினேன்
உன்னை காண வேண்டும்
என்ற ஏக்கம் என்னுள்
காணவில்லையே உன்னை?
எங்கே சென்றாய் என்னவளே
ஏமாற்றத்துடன் திரும்பும் போது
உணர்ந்தேன் உன்னை நான் தேடியது பசுமரக்காட்டில் அல்ல
காங்கிரீட் மரக் காட்டில்
மின்விளக்கு ஒளிக்கு பயந்து
ஒளிந்து கொண்டாயோ?-இல்லை
மின்விளக்கின் வெம்மையில்
வெந்து தான் போனாயோ?
செயற்கை உலகில் நீயும்
செயலிழந்து போனாயோ?

எழுதியவர் : ஜோதிமோகன் (8-May-21, 10:24 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 74

மேலே