ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தமே
********
வெள்ளிமணிக் கொலுசு அணிந்திட்ட கால்கள்
துள்ளிக் குதிக்கயில் ஒலிக்கும் ஜதிஒலிகள்
முல்லைப்பூச் சரம்போல அமைந்திட்ட பற்கள்
பள்ளம்விழு கன்னங்கள் சேலத்து மாங்கதுப்பு
கள்வடியும் இதழ்களிடை முத்துதிற்கும் புன்ன
கை
முளைதயிர் பிசைந்ததென காந்தள் மெல்
விரல்கள்
சிலையொத்த தோள்களிடை எடுப்பான
கனியகங்கள்
இலைவாழை நாபி குடக்கழுத்துச் சின்னயிடை
கேள்விக்குறி அதுபோல அழகான இருசெவி
கள்
எள்ளுப்பூ சிறுநாசி கெண்டைவிழி நயனங்கள்
வில்லொத்த புருவமிடை திலகமிட்ட சீர்நுதல்
நூல்வார்த்த சேலையுடன் நடந்துநீ வருகை
யிலே
துள்ளிவரும் ஆனந்தம் என்றும் என்றென்றும்!
*****