நெருடல்கள்

உற்றுப்பாருங்கள்
ஓவியம் இது...

காலங்கள் ஓவியமாய்...
நிஜத்தின் பிரதிபலிப்பாய்...

பாதம்பட்ட தண்ணீhpன்
கோரத் தாண்டவம்

கழுத்தை வளைக்கும் கரங்கள்
காதோரம் ஒட்டிய கண்கள்
கவலையறியா முகத்தில்
திவலைகளாய் நீா்த்துளிகள்

தாய் விடமாட்டாள்
தளிரின் நம்பிக்கை
தாயை விடமாட்டேன்
சேயின் செய்கை

ஓவியம் சொல்லும்
ஒற்றை மொழிதான்
"தாய்மை"

சுழற்றியடித்த காற்றில்
சுருங்கிவிட்ட உலகம்
சுற்று நோக்கிலும் தண்ணீா்...
உற்று நோக்கினால் கண்ணீா்...

மனிதா்களை காணோம்
மறுகணம் சாவோ...

தாயின்...

முகத்திலே கலவர விழிகள்
இடுப்பிலோ நம்பிக்கையின் ஒளிகள்

எவரையும் சோகமாக்கும் ஓவியம்
எமனையும் கலங்கவைக்கும் அதிசயம்

நெகிழ்ந்துவிட்டேன்...
நெருடல்கள் எழுத்தாயின.

நான் சொல்லும்
வணக்கங்கள் கோடி கோடி...
வரைந்தவரை
அடையவேண்டும் தேடி தேடி...

ஆடலரசன்

எழுதியவர் : ஆடலரசன் (6-Jun-21, 11:42 am)
சேர்த்தது : Adalarasan
பார்வை : 79

மேலே