ரோஜாவின் மன்னிப்பு
முள் குத்திவிடும் என்று
ஜாக்கிரதையாய்த்தான்
ரோஜா மலர்ந்தது
ஆனால்
அவள் மலரைப் பறிக்கும் போது
அவள் விரலை முள் குத்திவிட
என்னினும் மென்மையான
இவள் மெல்லிய விரலை
முள் குத்திவிட்டதே
என்று ரோஜா வருந்தியது
மன்னிப்பும் கேட்டுக்கொண்டது !