விளிம்பில் நின்றே
வஞ்சிவிருத்தம்
அழைத்து சென்று சிலரை
பிழைக்க வைக்கும் சிலரால்
உழைக்கும் மக்களின் வாழ்வு
செழிப்பு அடைவதை பாரீர் ------ (1)
கற்கும் கல்வியின் பலத்தால்
வெற்றியின் வழியினைக் கண்டு
பெற்றுக் கொள்ளுவோர் வாழ்க்கை
பொற்குடம் நிறைந்த பணமாம். ------ (2)
விளிம்பில் நின்றே எல்லையை
தெளிவாய் பார்த்தப் பின்பே
விளைவை நாடியே செயலையும்
களிப்பால் செய்தலே நலமாம். ------ (3)
விருப்பமாய் எதனையும் எண்ணியே
பொருத்தமாய் தூண்டுதல் துணையுடன்
கருத்தாய் செயலையும் செய்யவும்
இருப்பவர் தொழிலும் சிறக்குமே. ------ (4)
---- நன்னாடன்.